பிரபலமான இடுகைகள்

சனி, 5 பிப்ரவரி, 2011

தேகம் நாவல் விமர்சனம்

     இன்றைய ஸ்டார் எழுத்தாளர் சாருநிவேதாவின் புதிய நாவல் இது.இந்த நாவலை எந்த வித முன் பயிற்சியும் சிந்தனைப் பயிற்சியும் இல்லாதவர்கள் வாசித்தால் செக்ஸ் புத்தகம் என்றே கூறுவார்கள் அப்படித்தான் மிஸ்கினும் கூறினார். இதை வாசிக்க வாசக முதிர்ச்சி தேவை.
     உடல் அரசியல் என்கிற தனி வகைமையான கருத்தாக்கங்கள் உள்ளன. அவற்றை உள்வாங்கிக்கொள்ளாதவர்களுக்கு இது பயனற்ற பிரதி மட்டுமே.
     அது என்ன உடலரசியல் உடல் என்பது 20 வகையான புரதங்களால் ஆன உயிர்ம அமிலங்களின் தொகுதி முழுமை பெற்ற உடல்கள் எல்லாம் ஓரே மாதிரியானவை. ஆனால் அவற்றில் வேறுபாடுகள் நிலவாத சமுகங்களே பூமியில் கிடையாது.
     கறுப்பு நிறமான உடல்கள் கீழானவை, சிவப்பு வெள்ளை உடல்கள் மேலானவை. போதிய உணவு தடையின்றி பெறக்கூடிய உடல்கள் மேலானவை உணவே கிடைக்காத அல்லது உணவுக்கு உத்திரவாதமற்ற உடல்கள் கீழானவை இன்னின்ன குலத்தில் பிறந்த உடல்கள் கீழானவை இன்னின்ன குலத்தில் பிறந்த உடல்கள் மேலானவை இப்படியான பேதங்கள் தொடர்ந்து கொண்டே போகின்றன.

     இத்தகைய சமுக மதிப்பீடுகளே மனித குலத்திற்கே எதிரானவை. எனவே உடல் பற்றிய அதைக் கீழ்மைப்படுத்தும் சமுதாய மதிப்பீடுகளை உடைப்பதே உடல்மொழியின் நோக்கம். கூட்டுறவைச் சார்ந்திருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தம்முள் முகிழ்க்கும் அதிகாரத்தை தொடர்ந்து கண்காணித்துக் களைந்து கொள்வதே உடல்மொழியின் தேவை.
     இந்த அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டவை மறுக்கப்பட்டவை,புறக்கணிக்கப்பட்டவைற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உதாரணமாக உடல் உறுப்புகளில் ஒன்றான பின்பக்கப்பகுதியை பிருஸ்டம் என்ற சொல்லை ஏற்கிற சமுகம் குண்டி,சுத்து என்கிற் சொற்களை ஆபாசம் அருவெறுப்பு என மறுக்கிறது. இப்படி மொழிமீது புனிதம் கட்டமைக்கப்படுகிறது. பிருஸ்டத்தை பயன்படுத்துவோர் செம்மொழித்தமிழ்ர் சுத்தைப்பயன்படுத்துவோர் கொடுந்தமிழர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
     இந்த நியாயமற்ற பாகுபாட்டை ஒழிக்க வழி புறக்கணிக்கப்பட்ட விலக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவைகளை அரங்கேற்றுவதுமதான். அந்த வகையில்தான் சாருநிவேதாவின் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.
     இந்த நாவல் தர்மா என்பவனைப் பகற்றிய பதிவுகள். எழுத்தாளனாக இருக்கும் இவன் பெற்ற அனுபவங்கள் இவனுடைய பாலின்பம் காதல் இவன் வதைத்த உடல்கள் இவைகளே இந்த நாவலின் கதைக்களன்
     பாலின்பம் குறித்த உரையாடல்கள் மிக முக்கியமான விவாதங்களை வாசகர்கள் முன்பு வைக்கிறது. ஒருபால் உறவினர்களின் நியாயத்தை முன்வைக்கிறது.
      இந்த நாவலின் முக்கிய நோக்கம் உடல்குறித்த கற்பிதங்கள் பொதுக்கருத்தியல் இவற்றில் விரிசலை ஏற்படுத்துவதுதான் ஆனால் இந்த நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கிறதா எனில் இல்லை என்றே எனக்குப்படுகிறது
      உடல் அரசிலை முழுமையாக முன்வைக்கும் பிரதி அதிகவாசகர்களை அடையவேண்டும் என நினைக்காது. அது தலைப்பிலிருந்தே தன் பணியைத் தொங்கும்  உதாரணம் குட்டி ரேவதியின் முலைகள் ரமேஸின் (பிரேம்) சாராயக்கடை ஆனால் இந்த நாவலோ குண்டி சுத்து என்று தலைப்பிடமால் தேகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதிலிருந்தே இதன் நோக்கம் அதிக வாசகர்களைக் கவருவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
      பாலியல்  உறவு குறித்த புனித அறங்களை கேள்வி கேட்காமல் பாலியல் செய்ல்முறைகளை மட்டுமே எழுதியிருக்கிறார்.
     கற்பழிப்பு பாலம் அப்படி வன்பாலுறவு செய்தவனை நசுக்கி சித்திரவதை செய்யவேண்டும் என்கிற சினிமாத்தனமான (உதாரணம் சமீபத்தில் வெளியாள ஈசன்) பழிவாங்கலுக்கு கற்பனை தீர்வையே தந்திருப்பது பழைய அறத்தை துக்கி நிறுத்துவதுதான்.
     உடல் குறித்த பலவித கருத்தாங்களை கேள்விக்குள்ளாக்க கேலிக்குள்ளாக்க முயன்றுள்ளார். யோனிமைய பாலுறவு தவிர்த்து குத பாலுறவு உடம்பை வதைத்தல் காதலும் பைத்தியமாகும் உடலும் ஒரு பால் உறவு இவற்றை முன்நிறுத்தி கதையாக்கப்பட்டுள்ளது.
     உடலின் மற்ற செயல்பாடுகளான உடல் ஒடுக்கம் உடலை பட்டினி போடவைப்பதன் மூலம் அறத்திற்கான கருவியாக மாற்றுதல் உடலை சிதற வைக்கும் வெடிகருவியாக மாற்றுதல் அதிகாரத்துக்கு கட்டுப்படும் பொம்மையாக்குதல் போன்ற பலவற்றையும் எடுத்துக்கொண்டால் நாவலின் முழுமை கூடியிருக்கும்.
     வெற்று உழைப்பையேய தந்து கொண்டிருக்கும் சாரு அவசரப்படாமல் மிகப்பொறுமையாக இந்த நாவலை செய்திருந்தால் மிகச்செறிவான உடல் அரசியலுக்கு ஆதரவான நல்ல கருவியாக இது இருந்திருக்கும். புகழ் வெளிச்சம் தன் மீது மட்டுமே குவிய வேண்டுமென்ற வெறி இப்போது இவர் மீது கவிந்திருப்பதால் இந்த நாவல் கொண்டாட்டமாக மட்டுமே சுருங்கி சரோஜததேவி வகை நுலோ என ஐயப்படுமளவு இந்த நாவல் கீழ் இறங்கிவிட்டது. தமிழ் எழுத்துலகில் தனி முன்னோடியாக பலவற்றை கவிழ்த்துக்கொட்டிய சிந்தனைப்போராளி சாரு என்பதை மறக்கமுடியாது.இந்த நாவல் என் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதே என் வருத்தம்.






                                                                                                                                                                                 





1 கருத்து:

  1. உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை..

    ஆனால் நேர்மையாக ,உங்கள் மனதுக்கு பட்டதைஉ எழுதி இருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு