பிரபலமான இடுகைகள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்8

கேள்வி தமிழ்நாட்டில் இப்போது இருப்பது போல ஐயப்பன் வழிபாடு முன்பு பிரபலமாக இல்லை என்கிறார்கள் மூத்த குடிமக்கள் அது எப்போது யாரால் இங்கு பிரபலப்படுத்தப்பட்டது?


அதற்கு பெரும் பங்களிப்பு செய்தவர் பாளையம் பொன்னம்பலம் தியாகராசன் எனும் சர்.வி.டி.ராஜன் ஆவார். பெரும் நிலச்சுவானதாரும் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அதன் சார்பாக அன்றையச் சென்னை மாகாணத்தில் அமைச்சராக இருந்தவரும் சமூக அரசியல் பொருளாதார மற்றும் நீதி முதலிய நிர்வாகத் துறைகளில் மிகுந்த செல்வாக்குடைய சுற்றம் சூழல்களை உடையவருமான இவர், இந்திய விடுதலைக்குப்பிறகு அரசியல் செல்வாக்கை இழந்தார். 1952ல் மதுரை சட்டமன்றதேர்தலில் பொதுவுடமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய பி.இராமமூர்த்தியிடம் தோற்றுப்போன இவர் அதன் பிறகு தன்னுடைய சமய சமூகச் செல்வாக்கினை ஈட்டிக்கொள்ள முனைந்தார்.மதுரை அழகர் மலைக்கு மேலுள்ள அடிவாரத்தில் வைணவ அழகர் கோயில்  சிலம்பாறு எனும் இயற்கையின் நீருற்றுக்கு அருகே பழமுதிர் சோலையும் அதிலே முருகன் வேல்வழிபாட்டையும் முயன்று பிரபல்யப்டுத்திய பி.டி. இராஜன் மதுரையில் 1955 56ல் ஐயப்பன் வழிபாட்டை மக்களிடம் அறிமுகம் செய்தார். அவருடைய முன் முயற்சிகள் காரணமாகக் கட்டுப்பாடான குழுக்கள் மூலமாகத் தெரு தெருவாக ஐயப்பன் படங்கள் பூசைகள் பக்திப்பாடல்கள் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, பல ஊர்களில் இந்த வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டது.   இந்த தகவல் உள்ள புத்தகம் தமிழின் அடையாளம் பக்கம் 95ல் எழுதியவர் சிறந்த ஆய்வார்களில் ஒருவரான தி.சு.நடராசன் அவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக