பிரபலமான இடுகைகள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

கேள்வி  இப்போதைய சிறுகதைகளில் நிறைய விலைமகளிர் அதாவது பாலியல் தொழிலாளியிடம் போவதைப்பற்றி வருகிறேதே இது புரட்சி இல்லையா?


         .நீங்கள் வா.மு.கோமு சாரு நிவேதா போன்ற எழுத்தாளர்களைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் புதியது அல்ல, ஞானரதம் என்ற இலக்கியப்பத்திரிக்கை 70களில் வந்தது, அதில் செத்த பாம்பு என்ற சிறுகதை பிப்ரவரி 1970ல் வந்த சிறுகதை அதன் சுருக்கத்தை சொல்கிறேன் கேளுங்கள் அவன் இருபத்தேழு வயது இளைஞன். பெண்சுகத்தில் கற்பனையில் மட்டுமே கண்டவன். வீட்டுக்கு கலாய் பூச வந்தவனின் மகள் காமக்கொழுந்தை வளரவிட  பெண்சுகம் தேடி பஸ்ஸ்டான்ட் கடை வீதி என எங்ஙெங்கோ அலைந்து ஒரு ஆணைப்போல முகமும் சிகரெட்டும் பிடிக்கிற இந்திபேசும் பெண்ணிடம் 2  ருபாய்க்கு பேசி போகிறான், சுவரில் சாய்த்து முத்தமிடும் போதே உச்சம் அடைந்து லிப்டில் இறங்குவதுபோல துடிப்பு தாழ்ந்துவந்தது. சுவற்றில் ஒரு பாம்பு , உடனே அவள் அதை அடித்தாள் பிறகு அது செத்த பாம்பு அதை வாசலில் வீசிவிட்டு படுத்தாள். அவனால் இயங்கமுடியவில்லை ஒத்துழைக்காத உடம்போடு போனான் வந்தான் யோவ் எந்திரி என்று அவனை வெளியே அனுப்பிய அவள் நாளைக்கு பகல்ல வாங்கோ என்றாள்.வெளியில் செத்த பாம்தை மிதித்து விட்டான். பக்கெட்டில் இருந்த தண்ணீரில் காலைக்கழுவிக்கொண்டு சென்றான் என்று அந்தக்கதை முடியும், சொல்ல வந்த விக்ஷயத்தை அன்றே சொல்லிவிட்டார்களே சிறுபத்திரிக்கைகாரர்கள் இன்று என்ன சொல்வது?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக