பிரபலமான இடுகைகள்

புதன், 23 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்9

கேள்வி  முற்போக்கு இலக்கியம் என்கிறார்களே அது என்ன.?

இந்த சமுதாயம் இப்படியே சாதி,மத,சம்பிராதய,சாத்திர ஏற்றத்தாழ்வுடைய நிலையிலேயே நீடிக்கலாம் என்ற சமுதாயப்பார்வை ஒன்று உண்டு.
இதற்கு நேர் எதிரான பார்வை மற்றொன்று இந்த இரண்டாவது பார்வைதான் முற்போக்கானது. சமுதாய மாற்றம், முன்னேற்றம் என்பதே இன்றிருக்கும் நிலை மாறி, இந்தப்படியிலிருந்து அடுத்த படிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். இந்தப்பார்வைதான் முற்போக்குப்பார்வையாகும் இவ்வாறு சமுதாயத்தை அடுத்தடுத்த மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதே முற்போக்கு வாதமாகும். சமுதாய்ததைப்பற்றி எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு பார்வை இருக்கும் யாருடைய பார்வை சமுதாயத்தை முன்னெடுத்து செல்கிறதோ அது முற்போக்கு கண்ணோட்டம் .அதை பிரதிபலிக்கும் இலக்கியம் முற்போக்கு இலக்கியம். என்று ச, செந்தில்நாதன் தன்னுடை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற நுலில் கூறியுள்ளார்

1 கருத்து: