பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 மார்ச், 2011

புத்தகபூதம் பதில்கள் 12

கேள்வி நவீன கவிதைகளில் எளிமையான கவிதைகள் ஏதுமில்லையா?

ஏனில்லை நிறைய இருக்கிறது அதில் மிகவும் எளிமையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் எழுதக்கூடிய கவிஞர்களில் ஒருவர் சமயவேல் அவருடைய கவிதை ஒன்று இதோ படித்துப்பாருங்கள் இதை எழுதி பல வருடங்கள் ஆகிறது. இவருடைய அரைக் கணத்தின் புத்தகம் என்கிற கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது

பரிணாமப் பயன்பாடுகள்

பெயர் தெரியாத பூச்சி
பருப்பு டப்பாவுக்குள் இருந்தது
அதன் தாய்தந்தை யார் எதுவரை
படித்திருக்கிறது அதன் லட்சியம் என்ன
சாதனை என்ன வீட்டுப் பொறுப்பை
செவ்வனே செய்கிறதா பூர்ஷ்வாவா
கஞ்சா பிடிக்குமா
சமுகப் பிரக்ஞை உண்டா
கல்யாணம் ஆனதா லெபனான்
போர்பற்றி அதன் அபிப்ராயம் என்ன
ஒன்றும் தெரியாது
சாம்பல் நிறத்தில் வரிவரியாக
இத்தினியூண்டு மீசையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக