பிரபலமான இடுகைகள்

புதன், 2 மார்ச், 2011

புத்தக பூதம் பதில்கள்11

கேள்வி லிமரைக்கூ என்றால் என்ன?

லிமரிக்கும் ஹைக்கூவும் சேர்ந்த ஒரு கலப்பினக் கவிதை வடிவத்தை டெட்பாக்கர் என்பவர் முதன்முதலாக ஆங்கிலத்தில் உருவாக்கினார். ஜப்பானிய ஹைகூவின் 5,7,5 என்னும் அசையமைப்பையுடைய மூவடி எல்லையும் லிமரிக் ஓசை அமைப்பும் கொண்ட அதற்கு லிமரைக்கூ என்று பெயர். இவ்வாறு தமிழின் முதல் ஹைக்கூ நுலான சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் என்ற நுலில் ஈரோடு தமிழன்பன் கூறுகிறார்
அந்த நுலில் இருந்து சில லிமரைக்கூக்கள்

புகைபிடித்தால் இறப்பாய்
மதுகுடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்

பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன்நண்டு வகையே அதிகம்

மந்தை பிரிந்த ஆடு
முகவரி தொலைத்துவிட்டுத் தேடியது
வழியில் வந்தநரி யோடு

தாடி வளர்த்த ஈரோடு
தமிழர் பூமி முழுவதும் பரவி
மாற்றம் செய்தது வேரோடு

ஐயனார் வாளின் ஓரம்
அடடா தொட்டுப் பார்த்தால் நேற்று
பெய்த மழையின் ஈரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக