பிரபலமான இடுகைகள்

சனி, 19 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

 இந்தியாவின் தலைநகர் எப்போதுமே டெல்லியாகத்தான் இருந்து வருகிறாதா?

இல்லை டெல்லி 1912 முதல்தான் இந்தியாவின் தலைநகரானது அதற்கு முன்புவரை கொல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக இருந்ததது.  1905ல் வங்கப்பிரிவினை ஏற்பட்டது அல்லவா அதன் விளைவாக கொல்கத்தாவில் அதிதீவிரவாத இயக்கங்கள் வலிமையடையத் தொடங்கியதால் பிரிட்டிஷாருக்கு அது பெரிய தலைவலியாக மாறத்தொடங்கியது. இந்த தீவிரவாதிகளின் தொந்தரவிலிருந்து தப்பிக்க தலைமையிடத்தை மாற்றலாம் என ஆலோசிக்கப்பட்டது. 1911ல் அன்றைய வைசிராய் ஹார்டின்ஜ் பிரபுவின் முடிவின்படி தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 61வது சட்டத்திருத்தின்படி டெல்லி தேசிய தலைநகர் பகுதி எனத் தகுதி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக