பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

நீங்கள் ரசித்த பெண் கவிஞரின் காதல் கவிதையை சொல்லமுடியுமா?

சொல்கிறேன் கேளுங்கள் அந்த ஊர் ஒரு பழமையான ஊர் எப்போதும் கூத்தாட்டும் நடந்துகொண்டிருக்கும் ஊர் அந்த ஊரில் செல்வந்தர்கள் அதிகம் என்பதால் வறுமையோ அயற்சியோ இல்லை. அந்த ஊரில் துணி வெளுக்கும் தொழிலை செய்கிற ஒரு பெண் தானுண்ட இரவு உணவில் எஞ்சிய கஞ்சியிட்டு உலர்த்திய மெல்லிய ஆடையையும் பொன் மாலையும் அணிந்தவளாய் நடந்து வந்தாள். கருமையான பனை நாரினால் திரித்த பெரிய கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஊசலருகே அவள் சென்று நின்றாள். பூப்போன்ற கண்களைக் கொண்ட தோழியர் கூட்டம் ஊசலை ஆட்டிட ஆடாவதளாய் பூங்குழலியான அவள் விசும்பிச் சென்றாள் தகுதியில்லாதவர் என்னைச் சூழவுள்ளனரேயன்றி காதல் கொண்ட என் தலைமகன் வந்து ஊசலை அசைத்து மகிழும் நிலை எனக்கு வாய்க்கவில்லையே என்று  இதோ அந்த கவிதை
ஆடு இயல்விழவின் அழுங்கல் மூதுர்
உடையோர் பான்மையின் பெருங்கைதுவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொரு
வாடாமாலை துயல்வர,ஓடி,
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க,ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சிலவளைக்குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களொடு முகழீ இய
பயன் இன்று அம்ம,இவ்வேந்துடை அவையே-?..
  இதை எழுதிய பெண்கவிதாயினி அஞ்சில் அஞ்சியார். என்ன உங்கள் முகம் எதோ போல் ஆகிறது. நீங்கள் இன்றைய பெண்கவிஞர் யாரையாவது கூறுவேன் என்று எதிர்பார்த்தீர்களோ நாம யாரு எப்படி? இந்த பாடலை நான் படித்தது சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள் என்கிற ந,முருகேசபாண்டியன் அவர்கள் தொகுத்த நுலில் உள்ளது,.இது நற்றிணை 90 மருதப்பாடல்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக