பிரபலமான இடுகைகள்

புதன், 16 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

 ஒரு எம்.எல்.ஏ  எப்படி இருக்கவேண்டும்?

கொஞ்சம் ஏடாகூடமான கேள்விதான் பரவாயில்லை. ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்வதைவிட ஒரு கவிஞர் ஏற்கனவே சொல்லியிருப்பதை கூறுகிறேன், அவரே அப்படி இருந்தால் என்னாகும் என்பதையும் கூறியிருக்கிறார் பாருங்கள்

பாரதி என் எம்.எல்.ஏ
தேர்தலில் நிற்கும் போது
தெருவெல்லாம் சுற்றி வந்தார்ஹ
தேர்தலில் ஜெயித்த பின்பும்
தெருக்களை சுற்றிவந்தார்

தேர்தல் முடிந்த பின்பு
பாரதி எம்எல்ஏவோ
ஊரை மறந்ததில்லை
ஊழலில் மிதந்ததில்லை

ஜனங்களின் துயர் துடைக்க
சலித்ததே இல்லை பெரும்
பணக்காரர் பணத்தைக் கண்டு
பணிந்ததே இல்லை தன்

இனத்திற்குச் சேவை செய்யும்
இழிசெயல் இல்லை பாரதி
குணத்திற்குச் சான்று சொல்ல
கோடியில் ஒருவர் இல்லை

எம்எல்.ஏ ஆனபின்பு
எல்லா ஊர்களுக்கும்
சாலைகள் போட்டார்கல்விச்
சாலைகள் கண்டார் புது

ஆலைகள் வைப்பதற்கு
அயரா துழைத்தார் இங்கே
வேலைகள் இல்லா தோர்க்கு
வேலைகள் கிடைக்கச்செய்தார்

வங்கியில் கணக்கு இல்லை
வைப்பாட்டி ஏதும் இல்லை
பொங்கிவரும் தமிழைப்பேசி
பொருள் சேர்த்ததில்லை

தங்கரம் நீட்டி லஞ்சம்
தாவென்று கேட்டதில்லை
எம்.எல்.ஏ பாரதிக்கு
இணையாக எவரும் இல்லை

மாளிகை வாங்கவில்லை
மஸ்தான் தொடர்பு இல்லை
வேலியே பயிரை மேயும்
வித்தயைக் கற்றதில்லை

கூலிக்கு மாரடிக்கும்
கொள்கையைத் தெரிந்ததில்லை
போலியாய் வாழ்ந்ததில்லை
புகழுக்கு அலைந்ததில்லை
இப்படிப் போகும் கவிதையின் கடைசி வரிகளைப் பாருங்கள்
சரிநிகர் சமானமாக
ஜனங்கள் வாழ்தற்காக
பாரதி எம்.எல்ஏ இங்கு
பலமுறை சிறைக்குச் சென்றார்

சிறைசென்று லாபம் என்ன
சென்ற தேர்தலிலே
பாரதி தோற்றுப்போனார்
பணக்காரன் வெற்றி பெற்றான்

இந்தக் கவிதையை எழுதியவர் ஜீவபாரதி
கவிதை வெளியான ஆண்டு 1983

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக